Saturday, January 30, 2010

பைத்தியக்காரன் பத்தும் சொல்வான்


பைத்தியக்காரன் பத்தும் சொல்வான் போகட்டும் விட்டுவிடு
படைத்தவனிருப்பான் பார்த்துக்கொள்வான் பயணத்தை தொடர்ந்து விடு--
நீ பயணத்தை தொடர்ந்துவிடு 

ஐந்து விரல்களும் ஒன்றாயிருக்கும் மனிதன் உலகில் கிடைப்பானா?
அத்தனை பேர்க்கும் நல்லவனாக ஆண்டவன் கூட இருப்பனா?
உலையின் வாயை மூடும் கைகள் ஊரின் வாயை மூடிடுமா?
அலைகள் ஓய்ந்து நீராடுவது ஆகக்கூடிய காரியமா?

நரம்பிலாத நாவால் எதையும் வரம்பில்லாமல் கூறிடுவார் 
இருந்தால் வருவார் இழந்தால் பிரிவார்--நாளுக்கு நாள்தான் மாறிடுவார்
காய்ந்த மரம்தான் கல்லடிபடுமென கண்கூடாய் நாம் பார்த்ததுண்டு 
புத்தன் இயேசு காந்தியைக்கூட குற்றம் சொல்லி கேட்டதுண்டு... 
 

3 comments:

  1. கவிஞர் வாலி அவர்களின் வைர வரிகள்.

    ReplyDelete
  2. பைத்தியக்காரன் பத்தும் சொல்வான் mp3 பாடல்

    ReplyDelete