தானே எவனும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள்
என்றும் என்னை காக்கின்றாள்
ஜீவநதியாய் வருவாள் --என்
தாகம் தீர்த்து மகிழ்வாள்
தவறினைப்பொறுப்பாள்--தர்மத்தை வளர்ப்பாள்
தரணியிலே வளம் சேர்த்திடுவாள்
தூய நிலமாய் கிடப்பாள்--தன்
தோளில் என்னை சுமப்பாள்
தன்மையில்லாமல் நான் மிதித்தாலும்
தாய்மையிலே மனம்கனிந்திடுவாள்
மேகவீதியில் நடப்பாள் --உயிர்
மூச்சினிலே கலந்திருப்பாள்
மலர்முடி தொடுவாள் --மலர்மணம் தருவாள்
மங்கள வாழ்வுக்குத் துணையிருப்பாள்
ஆதி அந்தமும் அவள்தான்--நம்மை
ஆளும் நீதியும் அவள்தான்
அகந்தையை அழிப்பாள்--ஆற்றலை கொடுப்பாள்
அவள்தான் அன்னை மகா சக்தி-(அந்த தாயில்லாமல் )
No comments:
Post a Comment