Saturday, January 30, 2010

விவசாயி....!


விவசாயி.....! விவசாயி....
கடவுள் எனும் முதலாளி
கண்டெடுத்த தொழிலாளி....விவசாயி
முன்னேற்றப் பாதையிலே மனசை வைத்து
முழுமூச்சாய் அதற்காக தினம் உழைத்து
மண்ணிலே முத்தெடுத்து பிறர்வாழ
வழங்கும் குணமுடையோன் விவசாயி...!

என்ன வளம் இல்லையிந்தத் திருநாட்டில் ?
ஏன் கையை எந்தவேணும் வெளிநாட்டில் ?
ஒழுங்காய்ப் பாடுபடு வயல் காட்டில்
உயரும் உன் மதிப்பு அயல் நாட்டில்...!

கறுப்பென்றும் சிவப்பென்றும் வேற்றுமையாய்
கருதாமல் எல்லோரும் ஒற்றுமையாய்
பொறுப்புள்ள பெரியோர்கள் சொன்னபடி
உழைத்தால் பெருகாதோ சாகுபடி?

இருந்திடலாம் நாட்டில் பல வண்ணக்கொடி
எத்தனையோ கட்சிகளின் எண்ணப்படி...!
பறக்கவேண்டும் எங்கும் ஒரே சின்னக்கொடி--அது
பஞ்சம் இல்லையெனும் அன்னக்கொடி...!

No comments:

Post a Comment