பூ--மாலை உடல் மறைக்கும்!
இதழ் மேலே--இதழ் மோதும்-- அந்த
இன்பம் தேடுது எனக்கும்!
காலதேவனின் கலக்கம்!
இதை--காதல் என்பது பழக்கம்!
ஒரு ஆணும் ஒரு பெண்ணும்--பெறப்
போகும் துன்பத்தின் துவக்கம்!
பனியும், நிலவும், பொழியும் நேரம்
மடியில் சாய்ந்தாலென்ன?
பசும் பாலைப்போலும், மேனியெங்கும்
பழகிப்பார்த்தாலென்ன?
உடலும் உடலும் சேரும் வாழ்க்கை
உலகம் மறந்தாலென்ன?---தினம்
ஓடி ஆடி ஓயும்முன்பே...
உண்மை அறிந்தாலென்ன?
உறவுக்கு மேலே சுகம் கிடையாது...
அணைக்கவே தயக்கமென்ன?
இது ஓட்டை வீடு, ஒன்பது வாசல்
இதற்குள்ளே ஆசை என்ன?
முனிவன் மனமும் மயங்கும் பூமி
மோகவாசல் தானே! மனம்
மூடி மூடிப் பார்க்கும் போதும்
தேடும் பாதை தானே!
பாயில் படுத்து நோயில் வீழ்ந்தால்
காதல் கானல் நீரே! இது
மேடு பள்ளம் தேடும் உள்ளம்
போகும் ஞானத்தேரே...!
இல்லறம் கேட்டால் துறவறம் பேசும்
இதயமே மாறிவிடு!
நான் வாழ்ந்து பார்த்து சாய்ந்த தென்னை
உன்னை நீ மாற்றிவிடு!
No comments:
Post a Comment